ஆசிய இளைஞர் விளையாட்டு
ஸ்குவாஸ் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்
நஞ்சிங், ஆக. 20:-
இரண்டாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒறையர் ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த இளைஞர் குஷ் குமார் 17, மலேசியாவின் முகமது ஸ்யபிக் மோத் கமலுடன் மோதினார்.
இதில் குஷ் குமார் 11-9 5-11 11-9 11-7 என்ற செட்டுகளில் மலேசியாவின் கமலை வீழ்த்தி தங்கத்தை வென்றார்.
நடைபெற்றும் வரும் ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் சென்னை இளைஞர் குஷ் குமார் முதல் தங்கத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் யாதவ் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.
முதல் நாள் நடந்த போட்டிகளில்
இந்தியாவின் எம். கவிதா தேவி சிறுமிகளுக்கான ஜூடோவிலும், டி. லால்சன்ஹிமா
சிறுவர்களுக்கான பளுதூக்குதல் போட்டியிலும் தலா ஒரு வெண்கலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தியாவிற்கு மொத்தம் 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
0 comments