தென் மேற்கு பருவக் காற்று தீவிரம் குறைந்ததால்
மீண்டும் மின்தடை ஆரம்பம்
காற்றாலை, அனல் மின் உற்பத்தி குறைவு, மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைவு ஆகியவற்றால், 1,654 மெகா வாட் மின் பற்றாக்குறை நேற்று ஏற்பட்டுள்ளது; பற்றாக்குறை நீங்கி, நிம்மதியாக இருந்த, மூன்று மாதத்துக்கு பின், தமிழகத்தில், பரவலாக மின்தடை ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன், 10,364 மெகா வாட் ஆக உள்ளது. ஆண்டுதோறும், தமிழக மின் தேவை, 500 முதல், 700 மெகா வாட் அதிகரித்தது. மின் தேவையை விட, உற்பத்தி குறைந்ததால், 2008ம் ஆண்டு முதல், தமிழகத்தில், மின்தடை நடைமுறைக்கு வந்தது. கடந்த, 2009ல், 9,500 மெகா வாட் ஆக இருந்த, தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை, நடப்பாண்டின் மே மாதம், 12,036 மெகா வாட் ஆக அதிகரித்தது. இதனால், மின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழகம் முழுவதும் மின்தடை நடைமுறையில் இருந்தது.ஆனால், மே மாத இறுதியில், தென் மேற்கு பருவக் காற்று சற்று கை கொடுத்ததால், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்து, 3,500 மெகா வாட் வரை, மின் உற்பத்தி ஆனது. இதனால், மூன்று மாதங்களாக, தமிழகத்தில் மின் தடை பாதிப்பு வெகுவாகக் குறைந்திருந்தது.கோடை காலம் முடிந்து, சீதோஷ்ண நிலை மாறியதும், மின் தேவை குறைந்தது. இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சார அளவு அதிகரித்ததும் பெரிதும் உதவியது.
மூன்று மாதங்களுக்கு பின், தென் மேற்கு பருவக் காற்று தீவிரம் குறைந்ததால், காற்றாலை மின் உற்பத்தி சரிந்தது. மொத்தம், 7,150 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகளின் மின் உற்பத்தி, நேற்று காலை, 361 மெகா வாட் ஆக சரிந்தது.தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், ஒருயூனிட் பழுதடைந்ததால், 1,150 மெகா வாட் மின் உற்பத்திக்கு பதிலாக, 840 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மொத்தம், 2,970 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில், நேற்று காலை, 2,380 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது.வல்லூர் அனல் மின் நிலையத்தின், இரண்டு அலகுகளிலும் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், கடந்த, இரு தினங்களாக, இங்கிருந்து, தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய, 400 மெகா வாட் மின்சார வரத்து குறைந்திருக்கிறது.
தவிரவும், நேற்று முன்தினம் இரவு, மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் கொண்ட, ஒரு யூனிட்டில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணை சுரங்க மின் நிலையத்தில், வினாடிக்கு, 13,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு, மூன்று யூனிட்களில், 100 மெகா வாட் மின் உற்பத்தி மட்டும் செய்யப்பட்டது. இதனால், 2,237 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட நீர் மின் நிலையங்களில், நேற்று, 1,339 மெகா வாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டது.
மத்திய மின் தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு, 3,045 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். நேற்று, 1,673 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டது. நேற்று, தமிழகத்தின் மொத்த மின் தேவை, 10,783 மெகா வாட் ஆக இருந்த நிலையில், காற்றாலை, அனல் மின் உற்பத்தி சரிவு, மத்திய மின்தொகுப்பில் இருந்து வழங்கும் மின் அளவு குறைந்ததாலும், 1,654 மெகா வாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால், 9,129 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்பட்ட நிலையில், 1,654 மெகா வாட் மின் பற்றாக்குறையை சமாளிக்க, நேற்று, மாநிலம் முழுவதும் பரவலாக, இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது.
தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன், 10,364 மெகா வாட் ஆக உள்ளது. ஆண்டுதோறும், தமிழக மின் தேவை, 500 முதல், 700 மெகா வாட் அதிகரித்தது. மின் தேவையை விட, உற்பத்தி குறைந்ததால், 2008ம் ஆண்டு முதல், தமிழகத்தில், மின்தடை நடைமுறைக்கு வந்தது. கடந்த, 2009ல், 9,500 மெகா வாட் ஆக இருந்த, தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை, நடப்பாண்டின் மே மாதம், 12,036 மெகா வாட் ஆக அதிகரித்தது. இதனால், மின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழகம் முழுவதும் மின்தடை நடைமுறையில் இருந்தது.ஆனால், மே மாத இறுதியில், தென் மேற்கு பருவக் காற்று சற்று கை கொடுத்ததால், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்து, 3,500 மெகா வாட் வரை, மின் உற்பத்தி ஆனது. இதனால், மூன்று மாதங்களாக, தமிழகத்தில் மின் தடை பாதிப்பு வெகுவாகக் குறைந்திருந்தது.கோடை காலம் முடிந்து, சீதோஷ்ண நிலை மாறியதும், மின் தேவை குறைந்தது. இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து வரும் மின்சார அளவு அதிகரித்ததும் பெரிதும் உதவியது.
மூன்று மாதங்களுக்கு பின், தென் மேற்கு பருவக் காற்று தீவிரம் குறைந்ததால், காற்றாலை மின் உற்பத்தி சரிந்தது. மொத்தம், 7,150 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகளின் மின் உற்பத்தி, நேற்று காலை, 361 மெகா வாட் ஆக சரிந்தது.தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், ஒருயூனிட் பழுதடைந்ததால், 1,150 மெகா வாட் மின் உற்பத்திக்கு பதிலாக, 840 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மொத்தம், 2,970 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில், நேற்று காலை, 2,380 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது.வல்லூர் அனல் மின் நிலையத்தின், இரண்டு அலகுகளிலும் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், கடந்த, இரு தினங்களாக, இங்கிருந்து, தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய, 400 மெகா வாட் மின்சார வரத்து குறைந்திருக்கிறது.
தவிரவும், நேற்று முன்தினம் இரவு, மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் கொண்ட, ஒரு யூனிட்டில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணை சுரங்க மின் நிலையத்தில், வினாடிக்கு, 13,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு, மூன்று யூனிட்களில், 100 மெகா வாட் மின் உற்பத்தி மட்டும் செய்யப்பட்டது. இதனால், 2,237 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட நீர் மின் நிலையங்களில், நேற்று, 1,339 மெகா வாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டது.
மத்திய மின் தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு, 3,045 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். நேற்று, 1,673 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டது. நேற்று, தமிழகத்தின் மொத்த மின் தேவை, 10,783 மெகா வாட் ஆக இருந்த நிலையில், காற்றாலை, அனல் மின் உற்பத்தி சரிவு, மத்திய மின்தொகுப்பில் இருந்து வழங்கும் மின் அளவு குறைந்ததாலும், 1,654 மெகா வாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால், 9,129 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்பட்ட நிலையில், 1,654 மெகா வாட் மின் பற்றாக்குறையை சமாளிக்க, நேற்று, மாநிலம் முழுவதும் பரவலாக, இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது.
மூன்று மாதங்களாக, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், நேற்று, மீண்டும் மின்தடை ஏற்பட்டிருக்கிறது. காற்றாலையின் உற்பத்தி குறைவும், அனல் மின் நிலையங்கள் உற்பத்தி பாதிப்பும் சேர்ந்ததால், இந்த மின் தடை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
மேலும், சில பகுதிகளில் மின் சப்ளை சீராக இருக்க, மின் மாற்றிகளில் பராமரிப்பு பணி இருப்பதால், மின் தடை அமலாகும்போது, அது பரவலாக உணரப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் கடந்த இரு நாட்களாக அதிக வெயில் காரணமாக, மின் தேவை அதிகரித்திருக்கிறது. மூன்று மாதங்களாக இருந்த நிலை மாறி, மின் தடை ஏற்பட்டதால், பாதிப்பு குறித்த கவலை மக்களிடையே பெருமளவில் எழுந்திருக்கிறது.தமிழகத்தின் பெருமளவு மின் தேவையை ஈடுகட்ட, மின் வாரியம் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments