கிண்டி ரேஸ் கிளப் பெண் அதிகாரி கொடூரமாக வெட்டிக்கொலை
சென்னை, ஆக. 14:-
சென்னையில் ரேஸ் கிளப் பெண் அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கிண்டி ரேஸ் கிளப்பின் நிர்வாகக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் வெளியில் வந்துகொண்டிருந்தனர்.
சென்னையில் ரேஸ் கிளப் பெண் அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கிண்டி ரேஸ் கிளப்பின் நிர்வாகக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் வெளியில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது கிளப்பின் செயலாளர் அருணாவை நோக்கி வந்த ஒரு நபர் திடீரென அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அருணா சிறிது நேரத்தில் இறந்தார்.
இதுதொடர்பாக சோலமலை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் ரேஸ் கிளப்பின் முன்னாள் ஊழியர் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சோலமலை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் ரேஸ் கிளப்பின் முன்னாள் ஊழியர் என்பது தெரியவந்தது.
தன்னை வேலையை விட்டு நீக்கியதால், அருணாவை கொலை செய்ததாக சோலமலை வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலை சம்பவம் கிண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 comments