நைஜீரிய தீவிரவாதிகள் அட்டூழியம் மசூதியில் துப்பாக்கி சூடு
44 பேர் பரிதாப பலி
மெய்டுகுரி , மசூதியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 44 பேர் பலியானார்கள். நைஜீரியாவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியா போர்னோ மாகாணம் மெய்டுகுரியில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கோண்டுகா நகரம்.
இங்குள்ள மசூதியில் நேற்று முன்தினம் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தனர்.அப்போது துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த தீவிரவாதிகள், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் மசூதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலாளிகள் உள்பட 44 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. நைஜீரிய அரசுக்கு எதிராக போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு போராட்டம், வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் மசூதியில் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. நைஜீரிய அரசுக்கு எதிராக போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு போராட்டம், வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் மசூதியில் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த ஜூலை 6ம் தேதி யாபே மாகாணம் போடிஸ்கம் நகரத்தில் உள்ள அரசு பள்ளியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள்.
நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டகாசம் தொடர்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
0 comments