இலங்கை சிறையில் உள்ள ராமேசுவர மீனவர்கள் காவல் நீட்டிப்பு கோர்ட்டு உத்தரவு
இராமேசுவரம்:
இராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதும், சிறை பிடிப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இவ்வாறு ஜூலை 6–ந் தேதி 21 மீனவர்களும், ஆகஸ்டு 3–ந்தேதி 20 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு அங்குள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களை இன்று போலீசார் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து 41 பேரின் காவலையும் வருகிற 29–ந் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் 41 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
0 comments