ஜிம்பாப்வே தொடர் : முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி
இந்தியா , ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிக்கன்டர் ரசா அதிகபட்சமாக 82 ரன்கள் குவித்தார், சிக்கும்புரா 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது இந்திய அணி.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். தவான் 17 ரன்னிலும், ரோகித் சர்மா 20 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் ராயுடு பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். கேப்டன் கோஹ்லி 108 பந்துகளில் 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சர்வதேச போட்டியில் கோஹ்லிக்கு இது 15வது சதமாகும்.
அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
44.5வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் குவித்து இந்தியா வெற்றி பெற்றது.
தினேஷ் கார்த்திக் 8 ரன்களுடனும் ராயுடு 63 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
0 comments