இராமநாதபுரத்தில் பரபரப்பு
பள்ளிவாசலில் பொருட்களுக்கு தீவைப்பு
முகமூடி கும்பல் தாக்கியதில் 2 பேருக்கு வெட்டு
இராமநாதபுரம்:
இராமநாதபுரத்தில் பள்ளிவாசலில் பொருட்களுக்கு தீவைத்ததை தொடர்ந்து முகமூடி கும்பல் தாக்கியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
பொருட்களுக்கு தீ வைப்பு
இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பள்ளிவாசலில் யாரோ சிலர் பாய், துண்டு போன்றவற்றை தீயிட்டு கொளுத்தி போட்டுள்ளனர். அங்கிருந்த மின்விசிறி, ஒலிபெருக்கி போன்றவற்றையும் சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பொருட்களுக்கு தீ வைப்பு
இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பள்ளிவாசலில் யாரோ சிலர் பாய், துண்டு போன்றவற்றை தீயிட்டு கொளுத்தி போட்டுள்ளனர். அங்கிருந்த மின்விசிறி, ஒலிபெருக்கி போன்றவற்றையும் சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தை கண்டித்து இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த சம்பவத்தை கண்டித்து இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று காலை இராமநாதபுரம் கவராயர் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் வீரமணி (வயது 23), வசந்தநகரை சேர்ந்த முருகன் மகன் மீனாட்சி சுந்தரம் (30) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நாகநாதபுரம் வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை வழிமறித்த முகமூடி அணிந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டது. வீரமணி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாலிபர்கள் யார்?
இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வீரமணி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை. பள்ளி வாசலுக்கு தீவைத்ததன் எதிரொலியாக ஆர்ப்பாட்டம் நடத்திய போது அந்த வழியாக வந்த இவர்கள் முகமூடி கும்பலால் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
0 comments