சயனைடு மோகன் வாக்குமூலம் 20 பெண்களை கொன்றது எப்படி?
மங்களூர் :
சயனைடு மோகன் கொலை செய்த 20 பெண்களில் 6 பேர் மங்களூரை சேர்ந்தவர்கன். அனைவரும் திருமணம் ஆகாதவர்கள். உல்லாசமாக இருந்துவிட்டு கர்ப்ப தடை மாத்திரை என கூறி அதற்கு பதிலாக சயனைடு கொடுத்து கொலை செய்தான்.
லீலாபதி மேஸ்திரி கொலை: 2006ம் ஆண்டு பெல்தங்கடி வாமனபதவுவை சேர்ந்த லீலாவதி மேஸ்திரி (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணமாகாத அவர் மோகன் விரித்த வலையில் விழுந்தார். திருமணம் ஆசை காட்டி அவரை மத்திகெரேவுக்கு அழைத்து சென்றான். அங்கு தனியார் லாட்ஜில் அறை எடுத்து உல்லாசமாக இருந்தனர். அதிகாலையில் மத்திகெரே பஸ் நிலையத்திற்கு லீலா வை அழைத்து சென்றார். அங்கு இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தபோது, இரவு நடந்த சம்பவத்தால் கர்ப்பம் ஏற்பட்டுவிட கூடாது. திருமணத்திற்கு முன்பு அது பிரச்னை ஆகிவிடும்.
எனவே இந்த மாத்திரை போட்டுக் கொள் என்று சயனைடை மோகன் கொடுத்தான். அதை சாப்பிட்ட லீலாபதி, அருகேயுள்ள கழிப்பறைக்கு சென் றார். சிறிது நேரத்தில் கழிவறையிலேயே இறந்தார். இதையடுத்து, லாட்ஜில் வைக்கப்பட்டிருந்த லீலாவின் நகைகள், பணத்தை எடுத்து கொண்டு மோகன் தலைமறைவானான். 2008ல் சுனந்தா கொலை: மங்களூர் மாவட்டம் சுல்யா தாலுகா பெருவாஜே கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (25), பெண்கள் சுய உதவி குழுவில் வேலை பார்த்து வந்தார். அப்போது மோகனுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தன்னை வங்கி அதிகாரி என்று கூறிய மோகன், அவருக்கு ^25 ஆயிரம் கடன் வாங்கி தருவதாக கூறினார். அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டபோது வலையில் சுனந்தா விழுந்தார். அவரை வெளியூர்களுக்கு அடிக்கடி அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தான். இந்நிலையில், 2008ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி மைசூர் பஸ் நிலைய கழிவறையில் வாயில் நுரை தள்ளியபடி சுனந்தா சடலமாக கிடந்தார்.
2009ல் அனிதா கொலை : அனிதாவின் சொந்த ஊர் பன்ட்வால் தாலுகா பெருவாறு கிராமம். பட்டதாரி பெண். படித்து முடித்து வேலை தேடி கொண்டிருந்தார்.
அப்போது மோகனின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு வேலை வாங்கி தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி காதல் வலையில் விழ வைத்தான். 2009ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி வேலை வாங்கி தருவதாக ஹாசன் மாவட்டத்திற்கு அனிதாவை அழைத்து சென்றான் மோகன். அங்கு வழக்கமாக லாட்ஜில் அறை எடுத்து தங்கி அவருடன் உல்லாசம் அனுபவித்தான். அதிகாலையில் அவருக்கு சயனைடு கொடுத்தான். அதை சாப்பிட்ட அனிதா, ஹாசன் பஸ் நிலைய கழிவறையில் சடலமாக கிடந்தார். அவருடைய நகைளை சுருட்டி கொண்டு மோகன் தப்பினான்.
எனவே இந்த மாத்திரை போட்டுக் கொள் என்று சயனைடை மோகன் கொடுத்தான். அதை சாப்பிட்ட லீலாபதி, அருகேயுள்ள கழிப்பறைக்கு சென் றார். சிறிது நேரத்தில் கழிவறையிலேயே இறந்தார். இதையடுத்து, லாட்ஜில் வைக்கப்பட்டிருந்த லீலாவின் நகைகள், பணத்தை எடுத்து கொண்டு மோகன் தலைமறைவானான். 2008ல் சுனந்தா கொலை: மங்களூர் மாவட்டம் சுல்யா தாலுகா பெருவாஜே கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (25), பெண்கள் சுய உதவி குழுவில் வேலை பார்த்து வந்தார். அப்போது மோகனுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தன்னை வங்கி அதிகாரி என்று கூறிய மோகன், அவருக்கு ^25 ஆயிரம் கடன் வாங்கி தருவதாக கூறினார். அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டபோது வலையில் சுனந்தா விழுந்தார். அவரை வெளியூர்களுக்கு அடிக்கடி அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தான். இந்நிலையில், 2008ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி மைசூர் பஸ் நிலைய கழிவறையில் வாயில் நுரை தள்ளியபடி சுனந்தா சடலமாக கிடந்தார்.
2009ல் அனிதா கொலை : அனிதாவின் சொந்த ஊர் பன்ட்வால் தாலுகா பெருவாறு கிராமம். பட்டதாரி பெண். படித்து முடித்து வேலை தேடி கொண்டிருந்தார்.
அப்போது மோகனின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு வேலை வாங்கி தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி காதல் வலையில் விழ வைத்தான். 2009ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி வேலை வாங்கி தருவதாக ஹாசன் மாவட்டத்திற்கு அனிதாவை அழைத்து சென்றான் மோகன். அங்கு வழக்கமாக லாட்ஜில் அறை எடுத்து தங்கி அவருடன் உல்லாசம் அனுபவித்தான். அதிகாலையில் அவருக்கு சயனைடு கொடுத்தான். அதை சாப்பிட்ட அனிதா, ஹாசன் பஸ் நிலைய கழிவறையில் சடலமாக கிடந்தார். அவருடைய நகைளை சுருட்டி கொண்டு மோகன் தப்பினான்.
0 comments