சாம்பியன்ஸ் கோப்பை
இலங்கையயை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா
கார்டிப்:
இலங்கையுடனான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. கார்டிப், சோபியா கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டி, மழை காரணமாக அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இலங்கை தொடக்க வீரர்களாக குசால் பெரேரா, தில்ஷன் களமிறங்கினர். குசால் 4 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் ரெய்னா வசம் பிடிபட்டார். தில்ஷன் 17 ரன் எடுத்திருந்த நிலையில், காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். திரிமன்னே 7, சங்கக்கரா 17 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, இலங்கை 18 ஓவரில் 41 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் ஜெயவர்தனே, கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் 4வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 78 ரன் சேர்த்தனர். இலங்கை வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறியதால், இந்திய கேப்டன் டோனியும் விக்கெட் கீப்பிங் பணியை கார்த்திக் வசம் ஒப்படைத்துவிட்டு பந்துவீச்சில் இறங்கினார். எனினும், 4 ஓவர் வீசி 17 ரன் விட்டுக்கொடுத்த அவரால் விக்கெட் எதுவும் வீழ்த்த முடியவில்லை.
ஜெயவர்தனே 38 ரன்,
மேத்யூஸ் 51 ரன் (89 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்),
திசாரா பெரேரா 0,
குலசேகரா 1,
ஜீவன் 25 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
இலங்கை 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது.
தில்ஷன் 18, மலிங்கா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இஷாந்த், அஷ்வின் தலா 3,
புவனேஷ்வர், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான் , ரோகித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ரோகித் 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து வென்றது.
தவான் 68 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஹோக்லி 58 ரன், ரெய்னா 7 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நாளை மறுநாள் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா , இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
0 comments