பரமக்குடி அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு
இராமநாதபுரம், ஜூன் 4:
பரமக்குடி பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது52). இவர் திருமண விழாக்களில் அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நவநீதன், பரமக்குடி அருகே உள்ள மணிநகர் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியே வந்த சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நவநீதன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து ராமேசுவரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மணிமாறன், ஏட்டு மயில்முருகன் ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments