சிங்கம் - 2 ஜூன் 14ம் தேதி திரையில்...
சிங்கம் 3 விரைவில்
சென்னை:
நேரமும் சூழலும் அமைந்தால் சிங்கம் 3 படத்திலும் நடிக்க விரும்புகிறேன், என்றார் நடிகர் சூர்யா. 'சிங்கம்-2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடந்தது. இசைத் தட்டை கன்னட நடிகர் சுதீப் வெளியிட்டார்.
இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசுகையில், "சிங்கம்-2ஐ உருவாக்க நாங்கள் 8 மாதங்கள் உழைத்துள்ளோம். அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் ஒத்துழைக்க வேண்டும். இயக்குனர் ஹரிக்கு பொறுமையும், நேரமும் இருந்தால் சிங்கம்-3 படத்தில் நடிக்கவும் நான் விரும்புகிறேன். சிங்கம்-2ல் நடித்தபோது ஏற்பட்ட ஆர்வமும் உற்சாகமும் சிங்கம்-3லும் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஹரி அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நேரம் ஒத்துழைத்தால் சிங்கம்-3ல் நாங்கள் மீண்டும் ஒன்றாக இணைவோம்," என்றார். இயக்குநர் ஹரி பேசுகையில், "சிங்கம் படத்தை எடுக்கும்போதே, சிங்கம் 2 படம் குறித்த ஐடியா இருந்தது. சிங்கம் 3 உருவாக்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.
சூர்யாவுடன் அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மோட்வானி, நாசர், விஜயகுமார், சந்தானம், விவேக், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சிங்கம்-2' வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
0 comments