நடிகை சிம்ரன் கடத்தல் : சென்னையில் பரபரப்பு
நடிகை சிம்ரன் கடத்தப்பட்டதாக சென்னை யில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், ரோட்டோர சுவர்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. போவோர் வருவோரை இது ஈர்த்தது.
சிம்ரனை யார் கடத்தியது. போஸ்டர் உண்மையா? போலியா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியபடி சென்றனர். பத்திரிகை அலுவலகங்களுக்கும் சிம்ரன் கடத்தப்பட்டது நிஜமா என்று போன்கள் வந்தன.
இதுகுறித்து விசாரித்தபோது டி.வி. நிகழ்ச்சிக்கான விளம்பர போஸ்டர் என தெரிய வந்தது. டி.வி. சேனல் ஒன்றில் ‘கேம்ஷோ’ ஒன்றை சிம்ரன் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஒரு வருடம் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்துகிறார். அதற்காகவே இப்போஸ்டர்களை ஒட்டி பீதி கிளப்பியுள்ளனர்.
சிம்ரன் கடந்த 4 வருடமாக சினிமாவில் நடிக்கவில்லை. கணவர் தீபக்கை கதாநாயகனாக வைத்து புதுப்படம் தயாரிக்க திட்டமிட்டார். அது நடக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் டி.வி. கேம்ஷோவும் நடத்துகிறார்.













0 comments