10 June 2013

அஃப்கனிஸ்தானில் சர்வதேச விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடைபெற்று வருவதால் பதற்றம்

அஃப்கனிஸ்தானில் 

சர்வதேச விமான நிலையத்தின் மீது 

தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடைபெற்று வருவதால் பதற்றம்



அஃப்கனிஸ்தானில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது, தீவிரவாதிகள் இன்று அதிகாலை பயங்கர தாக்குதலை தொடங்கினர். அவர்களது தாக்குதலை முறியடிக்க, பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை அடுத்து, இரு தரப்பினரிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.


அஃப்கனிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியை அகற்றிய அமெரிக்கா, அங்கு பன்னாட்டுப் படைகளின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கப் படைகளுக்கு எதிராக தாலிபான் மற்றும் அல்கைதா தீவிரவாத அமைப்பினர் அவ்வப்பொழுது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் காபூலில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதலைத் தொடுத்தனர். 


பாதுகாப்பு மிகுந்த சர்வதேச விமான நிலையத்தை குறி வைத்தும், அப்பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டு ராணுவ முகாம்களை தகர்க்கும் நோக்கிலும், வெடிகுண்டுகள் மூலம் மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சண்டையால், காபூல் நகரில் பெரும் வெடிச் சத்தமும், துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்ட வண்ணம் உள்ளது. காபூல் நகரின் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தொடுத்து வரும் தாக்குதலை முறியடிக்க, பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து இடைவிடாது எதிர்த் தாக்குதல் நடத்தி வருவதால் அந்நகரமே பதற்றத்துடன் காணப்படுகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top