‘ பார்லி.,தேர்தல்: 40 தொகுதிகளிலும் தனித்து தனித்து போட்டி ’
- ஜெ., அதிரடி அறிவிப்பு
புதுடில்லி:
வரவிருக்கும் பார்லி.,தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என கட்சியின் பொதுசெயலரும், தமிழக முதல்வருமான ஜெ., டில்லியில் அளித்த பேட்டியின்போது கூறினார். தமிழகத்திற்கு வளர்ச்சிக்கான நிதியை கடந்த முறை மத்திய அரசு தரவில்லை என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்; நாட்டின் வளர்ச்சிக்கு 37 ஆயிரத்து 128 கோடி வேண்டும். கடந்த முறை 3 ஆயிரத்து 473 கோடி கூடுதலாக கேட்டோம். ஆனால் 2 ஆயிரத்து 762 கோடி வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் 37 ஆயிரத்து 128 கோடி வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். கடந்த 2012- 2013 ம் ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு கேட்டபடி கொடுக்கவில்லை. 2014ல தமிழகம் வளர்ச்சியில் சாதனை படைக்கும். மத்திய அரசின் மானியம் பயனாளிகளுக்கு மாநில அரசு மூலம் சென்றடைய வேண்டும். என்றார்.
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும் பதிலும்;
கேள்வி : பா.ஜ., கட்சியில் அத்வானி விலகல் குறித்து ?
பதில்: இது உள்கட்சி விவகாரம், நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: மோடி தேர்வு குறித்து ?
பதில்: அரசியல் ரீதியாக பதில் சொல்வதில் சரியாக இருக்காது. அதே நேரத்தில் அவர் தனிப்பட்ட முறையில் எனது நண்பர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குஜராத் வளர்ச்சிக்கு அழைத்து சென்றவர்.
கேள்வி: கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக பி.சி.சி.ஐ குறித்து தங்களின் கருத்து ?
பதில் : இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: பார்லி., தேர்தல் கூட்டணி எதுவும் உண்டா?
பதில் : அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெறுவதே நோக்கம்.
இவ்வாறு ஜெ., கூறினார்.
0 comments