சாம்பியன்ஸ் டிராபி :
தட்டுத்தடுமாறி இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து
தட்டுத்தடுமாறி இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து
கார்டிப்:
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையுடனான மோதலில் நியூசிலாந்து த்ரில் வெற்றியைப் பெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அபாரமாக பந்து வீசியது. தொடக்க வீரர்கள் பெரெரா 0 ரன்களிலும் தில்சன் 20 ரன்களிலும் அவுட் ஆயினர். பின்னர் ஆடிய சங்ககாரா நிதானமாக ஆடினார். இருப்பினும் அவருடன் நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் நின்று விளையாட முடியவில்லை. இதனால் இலங்கை அணி 37.5 ஓவர்களில் 138 ரன்களுக்குள் சுருண்டது.
நியூசிலாந்து அணியின் மெக்ளினஹன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 139 ரன்கள் எடுத்தால் என்ற எளிதான வெற்றி இலக்குடன் நியூசிலாந்து ஆட்டத்தை தொடர்ந்தது. தொடக்க வீரர்களாக காப்டில் 25 ரன்களிலும், ரொஞ்சி 7 ரன்களிலும் அவுட் ஆயினர். அடுத்து வந்த வில்லியம்ஸ் 16 ரன்களிலும் டெய்லர் ரன் ஏதும் எடுக்காமலும் பிரான்க்ளின் 6 ரன்களிலும் அவுட் ஆகினர். பிரன்டன் மெக்குலம் மற்றும் நாதன் ஜோடி சேர்ந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
கடைசியில் நியூசிலாந்து அணி 36.3 ஒவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
0 comments