10 June 2013

சென்னையில் உடலை 12 துண்டாக வெட்டிய கொடூரம்: முட்டை வியாபாரியை கொன்றார் கள்ளக் காதலி

சென்னையில் உடலை 12 துண்டாக வெட்டிய கொடூரம்: 

முட்டை வியாபாரியை கொன்றார் கள்ளக் காதலி



சென்னை: 
                       வாத்து முட்டை வியாபாரியை நகை, பணத்துக்காக அவரது கள்ளக்காதலி 12 துண்டாக வெட்டி கொலை செய்தார்.  சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் காளிமுத்து (42). ரயில்கள் மூலம் வெளி மாநிலங்களுக்கு வாத்து முட்டை ஏற்றுமதி செய்து வந்தார். கையில் எப்போதும்  50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை ரொக்கமாக வைத்திருப்பார்.  

சென்ட்ரலுக்கு வந்து செல்லும் போது, சுஜாதா என்பவருடன் இவருக்கு கள்ளக் காதல் ஏற்பட்டது. சுஜாதா தனது இரண்டாவது கணவர் முருகேசன் (45) என்பவருடன் வேப்பம்பட்டில் வசித்து வருகிறார். 


முருகேசனின் நண்பர் வேலு(25). திருநின்றவூரை சேர்ந்தவர். ஆடு, பைக் திருடுவது வேலுவின் பழக்கம்.  ஒருநாள் வேலுவிடம் பேசிய சுஜாதா, எதற்காக இப்படி.. சின்ன சின்ன திருட்டுகளை செய்கிறீர்கள்.எனக்கு தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் நிறைய பணம், நகை வைத்துள்ளார்.அவரை காலி செய்தால், நாம் செட்டிலாகி விடலாம் என்று கூறியுள்ளார். இதற்கு முருகேசனும், வேலுவும் ஒத்துக்கொண்டனர். 

அதன் பிறகு, திட்டம் தீட்டிய அவர்கள், மே 31ம் தேதி சுஜாதா மூலம் காளிமுத்துவை வேப்பம்பட்டு வீட்டுக்கு அழைத்துள்ளனர். மதியம் 1.30 மணிக்கு சுஜாதா வீட்டுக்கு காளிமுத்து சென்றுள்ளார். காளிமுத்துவும், சுஜாதாவும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது, டி.வி. சத்தத்தை சுஜாதா திடீரென அதிகரித்துள்ளார். அந்த சிக்னலை புரிந்துகொண்டு பாத்ரூமில் ஒளிந்திருந்த முருகேசனும், வேலுவும் வெளியே வந்து காளிமுத்துவை தாக்கினர். பின்னர், காளிமுத்துவை கீழே தள்ளிவிட்டு கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் காளிமுத்துவின் தலையை தனியாக வெட்டி எடுத்தனர். 

எஞ்சி இருந்த உடலை 12 துண்டுகளாக வெட்டியுள்ளனர். 

பின்னர் பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி னர். காளிமுத்து போட்டிருந்த 12 சவரன் சங்கிலி,  50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர்.  மாலை 3.30 மணிக்கு பிறகு, முருகேசன் பைக் ஓட்ட, பின்னால் உட்கார்ந்து கொண்ட சுஜாதா காளிமுத்துவின் உடல் துண்டங்கள் அடங்கிய மூட்டையை மடியில் வைத்துக் கொண்டார். 

முன்னால் இன்னொரு பைக் மூலம் வேலு வழிகாட்டி செல்ல, ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரிக்கு எடுத்து சென்று, அங்குள்ள ஒரு புதரில் மூட்டையை போட்டு எரித்துள்ளனர். பாதி எரிய ஆரம்பித்ததும், அங்கிருந்து கிளம்பியுள்ளனர். மீண்டும் வீட்டுக்கு வந்தவர்கள், ஜூன் 1ம் தேதி காலை காளிமுத்துவின் தலை இருந்த மூட்டையை எடுத்து கொண்டு ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள தோப்பில், பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். 

பின்பு ஊருக்கு திரும்பினர். இந்நிலையில், 2 நாட்களாக வீடு திரும்பாத கணவர் குறித்து காளிமுத்து வின் மனைவி அறிவுசெல்வி சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் செய்தார். ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சேகர் உத்தரவுப்படி டிஎஸ்பி பொன்ராம், இன்ஸ்பெக்டர் சேகர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர், காளிமுத்து செல்போனுக்கு வந்து, சென்ற அழைப்புகளை டவர் மூலம் ஆய்வு செய்தனர்.

 அதில், ஒரு எண்ணுக்கு காளிமுத்து அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. அந்த எண் சுஜாதாவுக்கு உரியது என தெரியவந்தது. வேப்பம்பட்டு சென்று, அவரை விசாரிக்க முயன்றனர். அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார். இதை தொடர்ந்து திருநின்றவூருக்கு சென்று விசாரித்தனர். அங்கிருந்த வேலுவின் உறவினர்கள் கடந்த சில நாட்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை என்றும், வேலுவுக்கு தவறான பழக்க, வழக்கம் இருந்ததையும் தெரிவித்தனர். 

அவரது செல்போனை ஆய்வு செய்யும்போது, ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. இதனிடையே நேற்று முன்தினம், வேலு திருநின்றவூ ருக்கு வந்ததும் செல்போன் டவர் மூலம் தெரிந்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படையினர் வேலுவை கைது செய்தனர்.  

இதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் காளிமுத்துவைக் கொலை செய்ததை ஒப்புகொண்டார். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான தனிப்படையினர் ஆந்திராவுக்கு சென்றனர்.

 பிச்சாட்டூர் ஏரியில் அறை குறையாக எரிந்து கிடந்த உடல் பாகங்களையும் காளஹஸ்தி தைல மரத்தோப்பில் நரி தின்றது போக, எஞ்சி இருந்த தலை பாகங்களை யும் தனிப்படையினர் கைப்பற்றினர்.

 பின்னர், அவற்றை காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட வேலு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். தலைமறைவாக உள்ள முருகேசன், சுஜாதாவை போலீசார் தேடி வருகின்றனர். 
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top