23 June 2013

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மூழ்கியது: ஒருவர் மாயம்; 3 பேர் உயிர் தப்பினர்

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் 

படகு கவிழ்ந்து மூழ்கியது: ஒருவர் மாயம்; 3 பேர் உயிர் தப்பினர்


இராமேசுவரம், ஜூன். 23:

பாம்பன், மண்டபம் பகுதியில் இருந்து நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தவமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தவமணி, சதீஷ்குமார், நாகநாதன், முரளி கண்ணன் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். 

அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது பயங்கர சூறாவளி காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. சூறாவளி காற்றில் தவமணிக்கு சொந்தமான படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். சதீஷ்குமார், நாகநாதன், முரளி கண்ணன் ஆகியோர் கடலில் நீந்தி கரை திரும்பினர். தவமணி மாயமானார். அவர் கதி என்ன என்று தெரியவில்லை. இதனால் தவமணி குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top