இராமநாதபுரத்தில் குழந்தை தொழிலாளர் மீட்பு
பாரதிநகரைச் சேர்ந்த காய்கறி கடைக்காரர் கைது
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மீன்கடை பகுதியில் உள்ள காய்கறி கடையில் சிறுவர்களை வேலைக்கு வைத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மனித வர்த்தக கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், சப்–இன்ஸ்பெக்டர் அனிதா ஆகியோர் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது மீன்மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறிகடை ஒன்றில் 10 வயது சிறுவனை வேலைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. அவனை மீட்ட போலீசார் கடை உரிமையாளரான பாரதிநகரைச் சேர்ந்த சரவணக்குமார் (வயது40) என்பவரை பிடித்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
சிறுவன் குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டான். சிறுவனின் தாய் சிறுவயதிலேயே பிரிந்து சென்றுவிட்டதால் பராமரிப்பு இல்லாமல் நாள் ஒன்றுக்கு ரூ.80 சம்பளத்தில் காய்கறி கடையில் வேலைபார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
0 comments