பைசூல் மீதான புகார் திடீர் வாபஸ்
நடிகை ராதா மீது நடவடிக்கை பாய்கிறது
சென்னை:
தொழிலதிபர் மீது கொடுத்த செக்ஸ் புகாரை நடிகை ராதா திடீரென வாபஸ் வாங்கி உள்ளார்.சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 22ம் தேதி புகார் அளித்தார்.
அதில், ஆந்திர மாநிலம் நெல்லூர் எனது சொந்த ஊர். என் இயற்பெயர் பர்வீன். சினிமாவுக்காக ராதா என்று மாற்றிக்கொண்டேன். 2008ல் எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் சவுந்தர் ராஜன் என்பவர், திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூல் என்பவரை சினிமா தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து வைத்தார். தான் தயாரிக்கும் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்த பைசூல் என் வீட்டுக்கு அடிக்கடி வந்தார்.
என்னை நேசிப்பதாகவும் திருமணம் செய்வதாகவும் அவர் ஆசை வார்த்தை கூறினார். கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்தோம். நான் கர்ப்பமானேன். பின்னர் அவர் கூறியபடி கருவை கலைத்தேன். பின்னர், வைர வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக என்னிடம் வாங்கிய 50 லட்சத்தை தர மறுத்துவிட்டார். இதுகுறித்து கேட்டால் என்னுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார்.
பின்னர், இந்த புகார்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.தொடர்ந்து பைசூலின் சகோதரி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், 1 கோடி கொடுத்தால் புகாரை வாபஸ் வாங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இல்லையெனில் கொலை செய்துவிடுவதாகவும் ஒரு கும்பல் என் சகோதரரை மிரட்டுகிறது என்று கூறியிருந்தார். இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் பைசூல் அளித்த 3 முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் வடபழனி காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த ராதா, பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக எழுதிக்கொடுத்தார். உடனே போலீசார், ‘நீங்கள் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விட்டது. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சொல்லுங்கள்’ என்றனர். ஆனால் ராதா பதில்கூறாமல் சென்றுவிட்டார்.
இந்நிலையில் வடபழனி காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த ராதா, பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக எழுதிக்கொடுத்தார். உடனே போலீசார், ‘நீங்கள் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விட்டது. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சொல்லுங்கள்’ என்றனர். ஆனால் ராதா பதில்கூறாமல் சென்றுவிட்டார்.
பைசூல் மீதும், போலீசார் மீதும் குற்றம் சாட்டி வந்த நடிகை ராதா திடீரென புகாரை வாபஸ் வாங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் பைசூல் மீது கொடுத்தது பொய் புகாரா? அல்லது சமரசம் என்ற பெயரில் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு வாபஸ் பெற்றாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராதா அளித்தது பொய் புகாராக இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments