முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 255 ரன்கள்
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விராட் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் விஜய் 6 ரன்களிலும், தவான் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின் களமிறங்கிய விராட் கோஹ்லி சிறப்பாக ஆடி சதம் அடித்து அசத்தினார். அவர் 140 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இறுதியில் 119 ரன்கள் எடுத்திருந்த போது காலிஸ் பந்தில் கோஹ்லி அவுட் ஆனார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ரகானே 43 ரன்களுடன், டோனி 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
0 comments