உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி:
இந்திய வீராங்கனை ஹீனா சிந்து தங்கம் வென்று சாதனை
மும்பை, நவ.11:
உலகின் டாப்-10 துப்பாக்கி சுடும் வீரார்கள் பங்கேற்கும் உலகக்கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்ற இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டார்.
நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் மொத்தம் 384 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியன் சோரனா அருணோவிக் (செர்பியா) 2 புள்ளிகள் பின்தங்கி வெள்ளிப் பதக்கமும், 381 புள்ளிகள் பெற்றிருந்த விக்டோரியா சாய்கா (பெலாரஸ்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இதன்மூலம், உலகக் கோப்பை இறுதியில் தங்கம் வென்ற இந்திய வீரர்களில் அஞ்சலி பகவத் (2003), ககன் நரங் (2008) ஆகியோருடன் ஹீனா சிந்துவும் இணைந்துள்ளார்.
50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பிரிவில் இந்தியாவின் லஜ்ஜா கோஸ்வாமி வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.
0 comments