அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார் பவர் ஸ்டார் சீனிவாசன்!
செக் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கைதாகி சமீபத்தில் போலீஸ் விசாரணைக்காக அந்தமான் வரைக்கும் போய் வந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். விசாரணை முடிந்து சென்னைக்கு வந்து ஜாமீனில் வெளிவந்ததும் இவர் பாதியில்விட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை மீண்டும் அந்தமானுக்கு அழைத்துப் போயிருக்கிறார்கள் ஒரு படக்குழுவினர்.
இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் ஜோ என்பவர் ‘நாலு பேரும் ரொம்ப நல்லவங்க’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பவர் ஸ்டார் ஒரு குடும்பத்திடம் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராத வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் ஜோ என்பவர் ‘நாலு பேரும் ரொம்ப நல்லவங்க’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பவர் ஸ்டார் ஒரு குடும்பத்திடம் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராத வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இவ்வாறு தில்லுமுல்லு செய்யும் பவர் ஸ்டாரை அந்தமான் சிறையில் அடைக்கிறார்கள். இந்த காட்சிக்காகத்தான் அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் சில காட்சிகளை எடுக்க பவர்ஸ்டாரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரும் அங்கு நடித்துக் கொடுத்துவிட்டு திரும்பியிருக்கிறார்.
0 comments