அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு கே.வி.ராமலிங்கத்துக்கு டம்மி பதவி
ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு கே.வி.ராமலிங்கத்துக்கு டம்மி பதவி
சென்னை:
தமிழக அமைச்சரவையில் நேற்று மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பும், கே.வி.ராமலிங்கத்துக்கு டம்மி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் நேற்று மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பும், கே.வி.ராமலிங்கத்துக்கு டம்மி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கத்தின், இலாகா நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. அவர், நிதி மற்றும் பொதுப்பணித்துறையை கவனிப்பார்.
அதேபோல, பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலன் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் இருந்து, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகிய துறைகள் மட்டும் கே.வி.ராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.சி.வீரமணி, இனி பள்ளிக்கல்வித்துறை தொல்லியல், தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்துறையை மட்டுமே கவனிப்பார்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா உள்ளிட்ட 34 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி.ராமலிங்கம், பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா உள்ளிட்ட 34 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி.ராமலிங்கம், பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஏனெனில், இவர் ராஜ்யசபா எம்பியாக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிவதற்கு முன்னரே,அவருக்கு சட்டப்பேரவை தேர்தலில் சீட் வழங்கப்பட்டது. இதனால் அவர் ஈரோடு மேற்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அவருக்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டது.
இவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் எதிர் அணியைச் சேர்ந்தவர். செங்கோட்டையனுக்கு ஆரம்பத்தில் விவசாயத்துறை வழங்கப்பட்டது.
மேலும், கே.வி.ராமலிங்கம், முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர் என்று கூறப்பட்டது. இதனால்தான் அவர் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியையும் சேர்த்து கவனிப்பதாக கூறப்பட்டது.
மேலும், கே.வி.ராமலிங்கம், முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர் என்று கூறப்பட்டது. இதனால்தான் அவர் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியையும் சேர்த்து கவனிப்பதாக கூறப்பட்டது.
தமிழக அமைச்சரவை இதுவரை 11 முறை மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் பல முறை அமைச்சரவையின் இலாகா மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. இப்போது, கே.வி.ராமலிங்கம், கே.சி.வீரமணி ஆகியோரிடம் இருந்த இலாக்காக்கள் பிடுங்கப்பட்டுள்ளது.
ஆனால் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூடுதலாக பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்றும் அப்போது பொதுப்பணித்துறை வேறு அமைச்சருக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
0 comments