தங்கச்சிமடம் அருகே மாணவ– மாணவிகளை அடித்ததாக புகார்
பள்ளி தாளாளரை கண்டித்து பெற்றோர் முற்றுகை
இராமேசுவரம், நவ. 9:
மாணவ– மாணவிகளை தாக்கியதாக கூறப்பட்ட புகாரினால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் அருகே உள்ள சந்தியா நகரில், கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான ஒரு பள்ளி உள்ளது. 8–ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இவர்கள், வேன் மூலம் பள்ளிக்கு வருகின்றனர். அக்காமடம் பகுதியில் இருந்து மாணவிகளை அழைத்து வந்த வேனை, தியாகராஜன் என்பவர் ஓட்டி வந்தார். இவர், மாணவ– மாணவிகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மறுநாள் பள்ளிக்கு வந்த மாணவ– மாணவிகளை பள்ளி தாளாளர் பில்லிகிரகாம் பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாலையில் வீடு திரும்பிய மாணவ– மாணவிகள், தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பள்ளி தாளாளர் மற்றும் வேன் டிரைவர் மீது நடவடிக்கை கேட்டு, தங்ச்சிமடம் போலீஸ் நிலையத்தை இரவில் முற்றுகையிட்டனர். தாக்குதல் தெடர்பாக ஜெனிபர், நூர்து மேரி என்ற மாணவிகளின் தந்தை டெலிவிஷன் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் செய்யது அலி முல்லா, சப்– இன்ஸ்பெக்டர்கள் செல்வம், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் மற்றும் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தினர்.
0 comments