கள்ளத்தொடர்பால் கணவன் ஆத்திரம்
கழுத்தை இறுக்கி மனைவி கொலை; நண்பனுக்கு கத்திகுத்து
அண்ணா நகர் :
மனைவியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன், கள்ள தொடர்பில் ஈடுபட்ட நண்பனை சரமாரியாக கத்தியால் குத்தினார். அவரை போலீசார் கைது செய்தனர். நெற்குன்றம் சாந்தா அவென்யு செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சுதாகர் (32). இவர் மணலியில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நெற்குன்றம் செல்லியம்மன் நகர் ஆனி தெருவில் வசிப்பவர் இளங்கோவன் (30). இவரது மனைவி ஜோதி (28). சுதாகரும், இளங்கோவனும் நண்பர்கள். இதனால் சுதாகர் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது சுகந்திக்கும் இளங்கோவனுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுதெரிந்து சுதாகர் மனைவி சுகந்தியையும் நண்பன் இளங்கோவனையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் இருவரின் கள்ள தொடர்பும் நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். சுதாகரும் வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் காலை 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். சுகந்தியிடம், தி.நகர் சென்று குழந்தைகளுக்கு தீபாவளிக்கு துணிகள் வாங்கி வரலாம் என அழைத்துள்ளார். அதற்கு, உன்னுடன் வர எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சுதாகர் வீட்டில் இருந்த நைலான் கயிறால் சுகந்தியின் கழுத்தில் இறுக்கி அவரை கொலை செய்துள்ளார். அதன்பின், இளங்கோவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இளங்கோவனை வெளியே அழைத்து அவரது கழுத்து, மார்பு, முதுகு பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். ஜோதியின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இளங்கோவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்படி கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்கு பதிவு செய்து சுதாகரை கைது செய்தார். விசாரணையில், அவர் தனது மனைவி சுகந்தியை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பின், சுதாகர் வீட்டுக்கு போலீசார் சென்று சுகந்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுதாகர் அளித்த வாக்குமூலத்தில், நானும் இளங்கோவனும் நெருங்கிய நண்பர்கள். நண்பனின் மனைவி என்று பார்க்காமல் எனது மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளான். பலமுறை எச்சரித்தும் அவர்களின் தொடர்பு நீடித்து வந்தது.
நேற்று என் மனைவியை தி.நகருக்கு அழைத்தபோது என்னுடன் வாழ பிடிக்கவில்லை. இளங்கோவனுடன் வாழ விரும்புவதாக கூறினாள். இதில் ஆத்திரமடைந்த நான் சுகந்தியின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொன்றேன். இளங்கோவனையும் கொல்ல முயற்சித்தேன். ஆனால் தப்பிவிட்டான் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
நெற்குன்றம் செல்லியம்மன் நகர் ஆனி தெருவில் வசிப்பவர் இளங்கோவன் (30). இவரது மனைவி ஜோதி (28). சுதாகரும், இளங்கோவனும் நண்பர்கள். இதனால் சுதாகர் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது சுகந்திக்கும் இளங்கோவனுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுதெரிந்து சுதாகர் மனைவி சுகந்தியையும் நண்பன் இளங்கோவனையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் இருவரின் கள்ள தொடர்பும் நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். சுதாகரும் வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் காலை 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். சுகந்தியிடம், தி.நகர் சென்று குழந்தைகளுக்கு தீபாவளிக்கு துணிகள் வாங்கி வரலாம் என அழைத்துள்ளார். அதற்கு, உன்னுடன் வர எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சுதாகர் வீட்டில் இருந்த நைலான் கயிறால் சுகந்தியின் கழுத்தில் இறுக்கி அவரை கொலை செய்துள்ளார். அதன்பின், இளங்கோவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இளங்கோவனை வெளியே அழைத்து அவரது கழுத்து, மார்பு, முதுகு பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். ஜோதியின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இளங்கோவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்படி கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்கு பதிவு செய்து சுதாகரை கைது செய்தார். விசாரணையில், அவர் தனது மனைவி சுகந்தியை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பின், சுதாகர் வீட்டுக்கு போலீசார் சென்று சுகந்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுதாகர் அளித்த வாக்குமூலத்தில், நானும் இளங்கோவனும் நெருங்கிய நண்பர்கள். நண்பனின் மனைவி என்று பார்க்காமல் எனது மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளான். பலமுறை எச்சரித்தும் அவர்களின் தொடர்பு நீடித்து வந்தது.
நேற்று என் மனைவியை தி.நகருக்கு அழைத்தபோது என்னுடன் வாழ பிடிக்கவில்லை. இளங்கோவனுடன் வாழ விரும்புவதாக கூறினாள். இதில் ஆத்திரமடைந்த நான் சுகந்தியின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொன்றேன். இளங்கோவனையும் கொல்ல முயற்சித்தேன். ஆனால் தப்பிவிட்டான் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
0 comments