மீனவர்களை விடுதலை செய்யக்கோரி
12–ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம்:
மீனவர் சங்க தலைவர் அறிவிப்பு
இராமேசுவரம், நவ.9:
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேசுவரத்தில் மீனவர்கள் கடந்த 6–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இராமேசுவரத்தில் மீனவர் சங்க தலைவர் போஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:–
இரு நாட்டு மீனவர்களும் பாக் ஜலசந்தி கடலில் சுமூகமாக மீன் பிடிக்க இலங்கை அரசுடனும், அந்நாட்டு மீனவர்களுடனும் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும்.
மேலும் இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தங்கச்சி மடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
0 comments