தமிழகத்துக்கு கர்நாடகா 26 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்
புதுடெல்லி :
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு நவம்பர் முதல் ஜனவரி வரை காவிரியில் திறந்து விட வேண்டிய 26 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விடும்படி கர்நாடகாவுக்கு காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு முறையாக அமல்படுத்துகிறதா என்பதை கண்காணிக்க ‘காவிரி மேற்பார்வை குழு’வை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய நீர்வள துறை செயலாளர் அலோக் ராவத் செயல்படுகிறார். டெல்லியில் நேற்று அவருடைய தலைமையில் இக்குழுவின் கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப் பணித்துறை செயலாளர் சாய்குமார், காவிரி குழு தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோரும், கர்நாடக அரசின் சார்பில் தலைமை செயலாளர் கவுசிக் முகர்ஜி, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளின் சார்பில் மாநில தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக அதிகாரிகள், ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை தமிழகத்துக்கு 26 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்து விடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்.
இதில், தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப் பணித்துறை செயலாளர் சாய்குமார், காவிரி குழு தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோரும், கர்நாடக அரசின் சார்பில் தலைமை செயலாளர் கவுசிக் முகர்ஜி, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளின் சார்பில் மாநில தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக அதிகாரிகள், ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை தமிழகத்துக்கு 26 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்து விடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மின் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். தமிழகத்தின் இந்த கோரிக்கையை ஏற்க கர்நாடக அதிகாரிகள் மறுத்தனர்.
கூட்டத்தின் முடிவில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய 26 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மேற்பார்வை குழுவின் தலைவர் அலோக் ராவத் உத்தரவிட்டார்.
கூட்டத்தின் முடிவில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய 26 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மேற்பார்வை குழுவின் தலைவர் அலோக் ராவத் உத்தரவிட்டார்.
கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி, ‘‘தமிழகத்துக்கு இந்தாண்டுக்கு வழங்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீருக்கு அதிகமாகவே காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
0 comments