9 November 2013

மற்றொரு வேலைக்காரி புகார் நாய் போல சாப்பிட வைத்தார் எம்.பி மனைவி ஜக்ரிதி சிங்

மற்றொரு வேலைக்காரி புகார் நாய் போல சாப்பிட வைத்தார்
 எம்.பி மனைவி ஜக்ரிதி சிங்


புதுடெல்லி : தரையில் முட்டி போட்டு, கையை பின்னால் கட்டி நாய் போல சாப்பிட வைத்து கொடுமை படுத்தினார் எம்.பி. மனைவி என்று மற்றொரு வேலைக்காரி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் ஜன்பூர் தொகுதியின் எம்.பி தனஞ்செய் சிங். இவரது  மனைவி ஜக்ரிதி சிங். இவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் ராக்கி என்ற வேலைக்காரியை இரும்பு கம்பியால் அடித்து, சித்தரவதை செய்து சூடு போட்டு கொடுமைப்படுத்தினார்.

 மேலும் நெஞ்சில் வலியால் துடித்த ராக்கிக்கு ஜக்ரிதி சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்தார். ஜக்ரிதி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதை மறைத்த குற்றத்திற்காக அவரது கணவரும், எம்.பி.யுமான தனன்ஜெசிங்கும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து மற்ற வேலைக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில் மீனா என்ற மற்றொரு வேலைக்காரி கூறுகையில், ஜக்ரிதி எங்களை மிக கொடூராமான முறையில் நடத்தினார். சாப்பிடும் போது தரையில் முட்டிபோட வைத்து கைகளை பின்னால் கட்டி கொண்டு நாய் போல சாப்பிட சொல்லி அடிப்பார். மேலும் இது போன்ற பல சோதனைகளை தினமும் எங்களுக்கு வைப்பார் அதை சரியாக செய்யவில்லை என்றால் சரமாரியாக அடி விழும் என்றார்.அடியின் காரணமாக மீனா தற்போது இடுப்பில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top