கோவை போலீஸ் பயிற்சி கல்லூரி மைதானத்தில் ஒத்திகையில்
குண்டு வெடிப்பு
கோவை:
கோவையில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் நேற்று வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் ஒத்திகை நடந்தது. இதில், எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்து சிதறியதில், பயிற்சியாளர் மற்றும் 7 எஸ்.ஐ.க்கள் படுகாயம் அடைந்தனர்.கோவையை அடுத்த துடியலூர் அருகே மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது.
இந்தியா முழுவதும் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்& இன்ஸ்பெக்டர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவற்றில் வெடி குண்டுகளை கண்டு பிடித்து செயலிழக்க செய்தலும் ஒன்று. நேற்று இந்த பயிற்சியில் உதவி சப்& இன்ஸ்பெக்டராக இருந்து சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற 7 பேர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த வெடி குண்டை கண்டுபிடித்து அவற்றினை செயலிழக்க செய்யும் பயிற்சியில் சுனில்தத் (43) தலைமையில் 7 சப்& இன்ஸ்பெக்டர்கள் ஈடுபட்டனர்.காலை 11.30 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடி குண்டு வெடித்து சிதறியது. குண்டின் துகள்கள் நான்கு புறங்களும் சிதறின.
மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த வெடி குண்டை கண்டுபிடித்து அவற்றினை செயலிழக்க செய்யும் பயிற்சியில் சுனில்தத் (43) தலைமையில் 7 சப்& இன்ஸ்பெக்டர்கள் ஈடுபட்டனர்.காலை 11.30 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடி குண்டு வெடித்து சிதறியது. குண்டின் துகள்கள் நான்கு புறங்களும் சிதறின.
இதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சப்& இன்ஸ்பெக்டர்கள் கான்பூரை சேர்ந்த சிசுராம்போரா(51), குஜராத்தை சேர்ந்த காந்திலால்(45), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ்(46), மத்திய பிரதே சத்தை சேர்ந்த பூபதின்ராஜா(51), ஜம்மு& காஷ்மீரை சேர்ந்த சுக்தேவ் சிங்(51) மேற்கு வங்கத்தை சேர்ந்த அபினாஷ் மெர்மோ(47) ஹரம்ஹத்(48), மற்றும் பயிற்சியாளர் சுனில்தத் ஆகியோர் காயம் அடைந்தனர்.
8 பேரும் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
0 comments