கூடுவாஞ்சேரியில் பரபரப்பு சொத்து பறிபோகாமல் இருக்க
கணவன் கொலை
சென்னை:
சொத்து பறிபோகாமல் இருக்கவும் உல்லாசத்துக்கு தடையாக இருந்ததாலும் நண்பனை தீர்த்து கட்டினேன் என பிடிபட்ட கள்ளக்காதலன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பாண்டூர் துர்கா நகரில் உள்ள விவசாய கிணற்றில் ஒரு சடலம் மிதப்பதாக கூடுவாஞ்சேரி போலீ சாருக்கு கடந்த வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்படி கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வாலிபரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சடலத்தின் கை, கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தன. மேலும், முதுகில் பாறாங்கல் கட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது, காயரம்பேடு கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தயாளன் (35) என்பவரை கடந்த 10ம் தேதி முதல் காணவில்லை என அவரது மனைவி காமாட்சி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தது காணாமல் போன தயாளனாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தயாளனின் மனைவி காமாட்சியை அழைத்து கொண்டு செங்கல்பட்டு சவக்கிடங்குக்கு சென்றனர்.
சடலத்தை பார்த்ததும், அது தனது கணவர் இல்லை என அவர் மறுத்துவிட்டார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.ஆனாலும், காமாட்சியின் மேல் சந்தேகமடைந்த போலீசார், அவரது செல்போன் நம்பரை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சடலத்தை பார்த்ததும், அது தனது கணவர் இல்லை என அவர் மறுத்துவிட்டார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.ஆனாலும், காமாட்சியின் மேல் சந்தேகமடைந்த போலீசார், அவரது செல்போன் நம்பரை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது காயரம்பேட்டை சேர்ந்த பூபதி என்பவர், காமாட்சியிடம் அடிக்கடி போனில் பேசியது தெரியவந்தது. போலீசார் பூபதியை பிடித்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.இதுதொடர்பாக, பூபதி வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் கூறியதாவது: நானும் தயாளனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வந்தோம். தயாளன் கடந்த 8 வருடங்களுக்கு முன் காமாட்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். நண்பன் என்ற முறையில் சமாதானம் செய்து வைப்பேன். அடிக்கடி தயாளன் வீட்டுக்கு சென்றுவந்தேன். அதில் காமாட்சியுடன் நெருங்கி பழகினேன். இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்து வந்தோம்.
எங்களின் பழக்கம் சமீப காலமாக தயாளனுக்கு தெரிய வந்தது. இதுபற்றி என்னிடம் கேட்ட போதெல்லாம் மது வாங்கி கொடுத்து சமாதானப்படுத்துவேன்.
எங்களின் பழக்கம் சமீப காலமாக தயாளனுக்கு தெரிய வந்தது. இதுபற்றி என்னிடம் கேட்ட போதெல்லாம் மது வாங்கி கொடுத்து சமாதானப்படுத்துவேன்.
மேலும் தயாளன் குடும்ப சொத்தை தாய்மாமாவான கண்ணன் அபகரிக்க நினைத்தார். அவருக்கு தயாளனும் சொத்தை விட்டு கொடுக்க முன்வந்தார். எனவே சொத்து பறிபோகாமல் இருக்கவும், நாங்கள் உல்லாசமாக இருக்க தடையாக உள்ள தயாளனை கொன்றுவிட்டால் பிரச்னை இருக் காது என காமாட்சி கூறினார்.
அதன்படி சம்பவத்தன்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை வரச்சொன்னேன். அப்போது தயாளனுடன் காமாட்சியும் வந்தார். தயாளனுக்கு இருவரும் சேர்ந்து அதிக மது ஊற்றி கொடுத்தோம். பின்னர் அவரை அடித்து கொன்றோம். நைலான் கயிற்றில் கை, கால்களை கட்டினோம். முதுகில் பாறாங்கல்லை கட்டி கிணற்றில் வீசினோம்.இவ்வாறு பூபதி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து பூபதி, காமாட்சி இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
0 comments