அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கும் கவுதம் மேனன்?
அஜீத், நயன்தாரா, ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆரம்பம்’. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.
கடன் பிரச்சினையில் சிக்கியிருந்த ஏ.எம்.ரத்னம் அதிலிருந்து மீள்வதற்காகவே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் அஜீத். ஆனால், இந்த படம் வெற்றியடைந்தாலும் ஏ.எம்.ரத்னத்தின் கடன் பிரச்சினை ஓரளவுக்குதான் தீருமாம். இதனால், மீண்டும் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக அஜீத் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்காக அஜீத்துக்கென்று பக்காவாக கதை ரெடி செய்து வைத்திருக்கும் இயக்குனரை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தேடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கவும் அஜீத் முடிவெடுத்துள்ளாராம். எனவே, ஏ.எம்.ரத்னம், கவுதம் மேனனை வைத்து அஜீத் படத்தை எடுக்க முன்வருவார் என கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அஜீத் தற்போது புதுமுக இயக்குனர் நேசன் இயக்கும் ‘வீரம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பார் என தெரிகிறது. ஏற்கெனவே, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இருந்து, அந்த படம் கதை சரியில்லாத காரணத்தால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments