சொத்துக்குவிப்பு வழக்கு:
முன்னாள் அமைச்சர் தமிழரசி கணவருடன் கோர்ட்டில் ஆஜர்
மதுரை, அக். 5:–
தி.மு.க. ஆட்சியின்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தமிழரசி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் தமிழரசி, அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மதுரை மாவட்ட ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இதன் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் தமிழரசி, கணவர் ரவிக்குமாருடன் ஆஜரானார். விசாரணை முடிவில் வருகிற 11–ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.
0 comments