கென்யாவில் மீண்டும் கலவரம்: சர்ச் எரிப்பு
துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
மொம்பாசா, அக். 5:-
கென்யாவில் மீண்டும் வெடித்த கலவரத்தில் கிருஸ்துவ தேவாலயம் தீக்கிரையாகியது. கலவரக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர்.
கடந்த மாதம் நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் வர்த்தக வளாகத்தில் தாக்குதல் நடத்தி 67 பேரின் படுகொலைக்கு காரணமானவர்களுடன் தொடர்புடைய சிலரை கைது செய்ய போலீசார் நடத்திய தாக்குதலில் அந்த முஸ்லிம் மதகுருவும் அவருடன் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து, நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். அப்பகுதியில் உள்ள சால்வேஷன் ஆர்மி சர்ச்சை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.
0 comments