பாக்தாத்தில் கார் வெடிகுண்டு வெடிப்பு: 39 பேர் பலி
பாக்தாத் :
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நேற்று கார்வெடிகுண்டு வெடித்ததில் அங்கு இருந்த 39 பேர் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ளது ஷிட்டி என்ற நகரம் உள்ளது. அந்த இடத்தில் ஒரு வணிக வளாகம் உள்ளது. அங்கு ஏராளமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் திடீரென ஒருகார் வெடித்து சிதறியது. அதன் அருகே உள்ள மாஷ்டால் என்ற இடத் திலும் குண்டு வெடித்தது.
இதில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இன்னும் யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் அல்,காய்தா இயக்கம் தான் இதை செய்து இருக்கும் என போலீசார் சந்தேகக்கின்றனர். இந்த சம்பவத்துடன் சேர்த்து இந்த மாதம் மட்டும் ஈராக்கில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இன்னும் யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் அல்,காய்தா இயக்கம் தான் இதை செய்து இருக்கும் என போலீசார் சந்தேகக்கின்றனர். இந்த சம்பவத்துடன் சேர்த்து இந்த மாதம் மட்டும் ஈராக்கில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
0 comments