பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணி
மணிமுத்தாறு அருவி 13–ந்தேதி வரை மூடல்
நெல்லை, அக்.8 :
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அருவி மூடப்பட்டுள்ளது.
பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, பாபநாசம் பாண தீர்த்த அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். விடுமுறை நாள்களில் பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்.
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் அண்மையில் பெண்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு சுவர், பாதுகாப்பு வளையம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது மணிமுத்தாறு அருவியில் சேதமடைந்த பாதுகாப்பு வளையம் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நின்று குளிக்க வசதியாக பாறையை உடைத்து மேம்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. இதனால் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித் துள்ளது.
பணி நிறைவடைந்ததும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர். எனவே, அருவியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்பு பணிக்காக இம்மாதம் 13–ந்தேதி வரை அருவி மூடப்படுவதாக வனச் சரகர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
0 comments