தமிழக அரசு தடை எதிரொலி 71 தாது மணல் குவாரிகள்
உடனடியாக மூடல்
நெல்லை:
தாது மணல் அள்ள அரசு தடை விதித்ததை தொடர்ந்து, நெல்லை, குமரி, மதுரை, திருச்சி, மாவட்டத்தில் 71 தாது மணல் குவாரிகள் மூடப்பட்டன.நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் தாலுகாவில் 53 இடங்களில் தாது மணல் அள¢ள நெல்லை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில் வி.வி.மினரல்ஸ், பிஎம்சி, டிரான்ஸ்வேர்ல்டு கார்னெட், தங்கராஜ், ரமேஷ் ஆகிய நிறுவனங்கள் அடங்கும். இது தவிர அரசின் டாமின் நிறுவனத்திற்கு ஒரு தாது மணல் குவாரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இங்கு மணல் எடுக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.தாது மணல் குவாரிகளில் மணல் அள்ள அரசு தடை விதித்து நேற்று பிற்பகல் உத்தரவிட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் குத்தகை வழங்கிய தாது மணல் குவாரிகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. ராதாபுரம் தாலுகாவில் இயங்கி வந்த 53 தாது மணல் குவாரிகள் நேற்று மூடப்பட்டன.இதுகுறித்து கலெக்டர் சமயமூர்த்தியிடம் கேட்ட போது, ‘அரசின் உத்தரவு உடனடியாக செயல்படுத்தப்படும்’ என்றார்.மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் கார்னட் குவாரிகள் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முருகனேரி மற்றும் கோபாலபுரம் ஆகிய ஊர்களில் உள்ளன. இந்த குவாரிகளை வி.வி மினரல்ஸ் என்ற நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், Ôஇந்த குவாரியை குத்தகைக்கு எடுத்த நிறுவனம் தற்போது இயங்காமல் நிறுத்திவிட்டது. இங்கிருந்து தாது மணல் வெட்டி எடுக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. தற்போது முதல்வரின் தடை உத்தரவால் இவ்விரு குவாரிகளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்Õ என்றார். குவாரிகளில் தாது மணல் வெட்டி எடுக்கப்பட்டது குறித்து சிறப்பு குழுவினர் ஓரிரு நாளில் ஆய்வு செய்ய உள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் முசிறியை அடுத்த சூரம்பட்டி மற்றும் தொட்டியத்தை அடுத்த அப்பநல்லூர் கிராமங்களில் இயங்கி வந்த 2 தாதுமணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த தாதுமணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக அப்பநல்லூரில் உள்ள தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம், ரஸ்தாகாடு பகுதிகளில் உள்ள விவி மினரல் நிறுவனத்திற்கு சொந்தமான 2 குவாரிகளிலும் தாது மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது.இந்த 4 மாவட்டங்களிலும் மொத்தம் 71 தனியார் தாது மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், Ôஇந்த குவாரியை குத்தகைக்கு எடுத்த நிறுவனம் தற்போது இயங்காமல் நிறுத்திவிட்டது. இங்கிருந்து தாது மணல் வெட்டி எடுக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. தற்போது முதல்வரின் தடை உத்தரவால் இவ்விரு குவாரிகளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்Õ என்றார். குவாரிகளில் தாது மணல் வெட்டி எடுக்கப்பட்டது குறித்து சிறப்பு குழுவினர் ஓரிரு நாளில் ஆய்வு செய்ய உள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் முசிறியை அடுத்த சூரம்பட்டி மற்றும் தொட்டியத்தை அடுத்த அப்பநல்லூர் கிராமங்களில் இயங்கி வந்த 2 தாதுமணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த தாதுமணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக அப்பநல்லூரில் உள்ள தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம், ரஸ்தாகாடு பகுதிகளில் உள்ள விவி மினரல் நிறுவனத்திற்கு சொந்தமான 2 குவாரிகளிலும் தாது மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது.இந்த 4 மாவட்டங்களிலும் மொத்தம் 71 தனியார் தாது மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
0 comments