திண்டுக்கல் அருகே பேருந்து மீது கார் மோதல்
கேரளாவை சேர்ந்த 5 பேர் பலி
வத்லகுண்டு, செப் 5:-
திண்டுக்கல் மாவட்டம் வத்லகுண்டு அருகேயுள்ள சிங்காரக்கோட்டையில் நேற்று அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டுக்கொண்டிருந்தது.
அப்போது சென்னையில் இருந்து கேரளாவிற்கு சென்ற கார் ஒன்று அந்த பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியது.இதில் அந்த காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துபோயினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த ஜோசப் என்ற மாணவன் ஓணம் பண்டிகை கொண்டாட தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கேரளா சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.












0 comments