இராமேசுவரம்–கோவை வாராந்திர விரைவு ரெயில் 17–ந்தேதி முதல் இயக்கம்
மதுரை, செப். 13:–
இராமேசுவரம்–கோவை இடையே வாதாரந்திர விரைவு ரெயில் 17–ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரெயில்வே முது நிலை மக்கள் தொடர்பு அதிகாரி வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
கோவை–இராமேசுவரம் வாராந்திர விரைவு ரெயில் (எண். 16618) கோவையில் இருந்து 17–ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6.45 மணிக்கு இராமேசுவரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் இராமேசுவரம்–கோவை வாராந்திர விரைவு ரெயில் (எண்.16617) இராமேசுவரத்தில் இருந்து 18–ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு கோவை சென்றடையும்.
இந்த ரெயில் வாரந் தோறும் கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமைகளிலும், இராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை தோறும் புறப்படும்.
இந்த ரெயிலில் இரண்டடுக்கு குளிர்சான பெட்டி–1, மூன்றடுக்கு குளிர்சான பெட்டி–3, 13 படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி, இரண்டு 2–ம் வகுப்பு பொதுப்பெட்டி மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
ரெயில் திருப்பூர், ஈரோடு, கரூர் சந்திப்பு, திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு, பரமக்குடி, இராமநாதபுரம், மண்டபம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். ரெயில் எண். 16617 மட்டும் கோவை வடக்கு ரெயில் சந்திப்பிலும் நின்று செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments