கமுதி பகுதியில் பெட்டி கடை–டீ கடைகளில் மது விற்ற 12 பேர் கைது
கமுதி:
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று இமானுவேல்சேகரன் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. அங்குள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஏதும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில் மாவட்ட மது விலக்கு டி.எஸ்.பி. தங்வேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜாமணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் கென்னடி, செல்லசாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
கமுதி, சிக்கல், காவா குளம் பகுதிகளில் ரோந்து சென்றபோது அங்குள்ள பெட்டி கடைகள், ஓட்டல்களில் ரகசியமாக மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக முத்துசாமி, வழிவிட்டான் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
0 comments