மலேரியா நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஊசி மருந்து கண்டுபிடிப்பு
லண்டன், ஆக 10:–
மலேரியா நோய் கிருமிகளை பரப்ப கூடிய கொசுக்களால் உருவாகிறது. கொசுக்கள் மூலம் உடலுக்குள் செல்லும் கிருமிகள் முதலில் கல்லீரலை தாக்குகின்றன. பின்னர் அவை பல மடங்காக அதிகரித்து ரத்தத்தில் கலந்து மலேரியா நோயை உருவாக்குகின்றன.
இந்த நோயினால் உலகம் முழுவதும் ஆண்டான்டுக்கு 50 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 30 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மேலும் இந்த நோயினால் 30 வினாடிக்கு ஒரு குழந்தை மடிகிறது.
எனவே, இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தக் கூடிய மருந்து கண்டு பிடிப்பதில் நிபுணர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட மருந்துகள் முழுமையாக குணமடையக் கூடிய வகையில் இல்லை.
இந்த நிலையில், தற்போது மலேரியாவை முற்றிலும் குணப்படுத்தக் கூடிய புதிய ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிஸ்ப்ஷ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஊசி மருந்தை 40 பேருக்கு பயன்படுத்தி முதற்கட்டமாக பரிசோதிக்கப்பட்டது. அதில் 100 சதவீதம் நோய் பாதிப்பு குணமடைந்தது. இருந்தாலும், சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மலேரியா நோய் கிருமிகளை பரப்ப கூடிய கொசுக்களால் உருவாகிறது. கொசுக்கள் மூலம் உடலுக்குள் செல்லும் கிருமிகள் முதலில் கல்லீரலை தாக்குகின்றன. பின்னர் அவை பல மடங்காக அதிகரித்து ரத்தத்தில் கலந்து மலேரியா நோயை உருவாக்குகின்றன.
இந்த நோயினால் உலகம் முழுவதும் ஆண்டான்டுக்கு 50 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 30 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மேலும் இந்த நோயினால் 30 வினாடிக்கு ஒரு குழந்தை மடிகிறது.
எனவே, இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தக் கூடிய மருந்து கண்டு பிடிப்பதில் நிபுணர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட மருந்துகள் முழுமையாக குணமடையக் கூடிய வகையில் இல்லை.
இந்த நிலையில், தற்போது மலேரியாவை முற்றிலும் குணப்படுத்தக் கூடிய புதிய ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிஸ்ப்ஷ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஊசி மருந்தை 40 பேருக்கு பயன்படுத்தி முதற்கட்டமாக பரிசோதிக்கப்பட்டது. அதில் 100 சதவீதம் நோய் பாதிப்பு குணமடைந்தது. இருந்தாலும், சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
0 comments