15 August 2013

பறக்கும் விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு பிரசவம்

பறக்கும் விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு பிரசவம்



               ராபாத் (மொராக்கா) , நடுவானில் பறந்த விமானத்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. விமானம் தரையிறங்கும் முன்பாக குழந்தை பிறந்தது. மொராக்காவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க நாடான மொராக்கா காசாபிளாங்காவில் இருந்து ராயல் ஏர் மொராக் என்ற விமானம் இத்தாலி போலக்னாவிற்கு புறப்பட்டு சென்றது.

இதில் கர்ப்பிணி பெண் உள்பட ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து பைலட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்பெயின் பார்சிலோனாவில் விமானத்தை தரையிறக்கி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெண்ணை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஆனால் விமானம் தரையிறங்குவதற்கு முன்பே பெண்ணிற்கு பிரசவலி அதிகமானது. இதனால் விமான பணிப்பெண்கள், மருத்துவ உதவி பெண்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அந்த பெண்ணிற்கு பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே அழகான குழந்தை பிறந்தது.

அதன்பின் விமானம் தரையிறக்கப்பட்டு தாய், குழந்தையை பார்சிலோனாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் நலமாக உள்ளனர். பெண்ணின் பெயர், எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விபரத்தை ஏர்லைன்ஸ் நிர்வாகம் வெளியிட மறுத்து விட்டது.

பார்சிலோனா விமான நிலையத்தில் பரபரப்பு அடங்கியது 50 நிமிடம் தாமதமாக போலக்னாவிற்கு விமானம் புறப்பட்டு சென்றது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top