இராமேசுவரத்தில்
அரசு ஆஸ்பத்திரி கட்டிடம் இடிந்து விழுந்தது
நோயாளிகள் 2 பேர் படுகாயம்
இராமேசுவரம், ஆக. 29:
இராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரி ரெயில் நிலையம் அருகே உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பேர் மருந்து, மாத்திரை பெற்று சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இராமேசுவரத்தில் இன்று காலை மழை பெய்தது. அப்போது டாக்டர்கள் ஒவ்வொரு வார்டாக சென்று நோயாளிகளை பார்த்து சென்றனர்.
அப்போது பழைய வார்டு கட்டிடத்தின் மேல் கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த அறையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த செம்மமடம் சூசையம்மாள் (வயது50), வேர்கோடு செலின்மேரி (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் 22 பேர் அதிர்ஷ்ட வசமாக காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். காயம் அடைந்த 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
0 comments