இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பஸ்
இஸ்ரோ விஞ்ஞானி கண்டுபிடிப்பு
இஸ்ரோ விஞ்ஞானி கண்டுபிடிப்பு
நெல்லை:
ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்சை மகேந்திரகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள ‘இஸ்ரோ‘வில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஞானகாந்தி. இவர் டீசல், கேஸ் ஏதுமின்றி ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்சை வடிவமைத்துள்ளார்.
நீண்ட வருடங் களாக, ஹைட்ரஜன் வாயு வில் இயங்கும் வாகனம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்த இவர் இந்த முயற்சி வெற்றியடையே பஸ்சையே இயக்க முடியும் என்ற விபரத்தை ஐஎஸ்ஆர்ஓ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இஸ்ரோ குழுவினர் மற்றும் டாடா வாகன உற்பத்தி நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ராஜா தலைமையிலான குழுவினர் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் மெகா சைஸ் வால்வோ பஸ்சை தயாரிக் கும் பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர்.
இப்பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, இந்தியாவிலேயே முதன் முறையாக ஹைட்ரஜன் வாயுவில் ஓடும் பஸ்சை மகேந்திரகிரி மையத்தில் சோதனை ஓட்டமாக இயக்கினர்.
சுமார் ஒரு மணி நேரம் பஸ்சை பல கோணங்களில் இயக்கி காட்டினர். விஎஸ்எஸ்சி, டாடா மோட்டார்ஸ், இஸ்ரோ அதிகாரிகள் முன்னிலையில் வெற்றிகரமாக பஸ் இயக்கப்பட்டது.
இதுகுறித்து விஞ்ஞானி ஞானகாந்தி கூறியதாவது:
ஹைட்ரஜன் வாயுவில் ஓடும் இந்த பஸ் ஒரு சதவீதம் கூட புகை மாசு ஏற்படுத்தாது. குறைந்த அளிவிலான ஓசை மட்டும் வெளிப்படும். பஸ்சின் மேல் பகுதியில் சிலிண்டர்கள் இடம்பெற்றிருக்கும்.
இதில் இருந்து குழாய்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்தி, பஸ்சின் பின்பகுதியில் உள்ள நவீன கருவிகள் மூலம் ஹைட்ரஜன் வாயு உருவாகி இயங்கும்.
8 சிலிண்டர்களில் உள்ள தலா 30 கிலோ ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி 220 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments