சென்னை ஸ்பென்சர் பிளாசா
3வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் சாவு
சென்னை :
ஸ்பென்சர் பிளாசா வளாகத்தின் 3வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் இறந்தார். அவர் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர். அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா அடுக்கு மாடி வணிக வளாகம் உள்ளது.
5மாடி கொண்ட இந்த வணிக வளாகத்தில் நேற்று மதியம் 12.30மணி அளவில் வாலிபர் ஒருவர் 3வது மாடியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென அந்த மாடியில் இருந்து அவர் தரைதளத்தில் குதித்தார். அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து அலறினர். தரை தளத்தில் விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனே ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென அந்த மாடியில் இருந்து அவர் தரைதளத்தில் குதித்தார். அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து அலறினர். தரை தளத்தில் விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனே ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் கந்தவேலு தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மதியம் 3 மணி அளவில் அவர் பரிதாபமாக இறந்தார்.
முதல்கட்ட விசாரணையில், இறந்த வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த கிஷோர் குமார் (26) என்பது தெரிய வந்தது. அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், இறந்த வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த கிஷோர் குமார் (26) என்பது தெரிய வந்தது. அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவரிடம் போலீசார் எதற்காக மாடியில் இருந்து குதித்தீர்கள் என்று கேட்டதற்கு, “ஜஸ்ட் பார் ஃபன்’’ என்று கிஷோர் குமார் பதில் அளித்துள்ளார். ஊர் எது என்று கேட்டதற்கு கும்பகோணம், வேலூர் என்று மாற்றி மாற்றி கூறி உள்ளார். இதனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த மாதம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் மற்றொரு வாலிபர் ஸ்பென்சர் பிளாசா வணிக வளாக மாடியில் இருந்து குதித்து இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் மற்றொரு வாலிபர் ஸ்பென்சர் பிளாசா வணிக வளாக மாடியில் இருந்து குதித்து இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments