பழகிய ஒரே வாரத்தில் உல்லாசமாக இருந்து விட்டு
திருமணம் செய்ய நச்சரித்ததால்
காதலியை கல்லால் அடித்து கொன்ற வாலிபர்
காதலியை கல்லால் அடித்து கொன்ற வாலிபர்
சென்னை :
கடந்த 25ம் தேதி சூளைமேடு கூவம் ஆற்றில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். சூளைமேடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும், பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவரை பற்றி எந்தவித தகவலும் தெரியாமல் இருந்தது. இதனால் கொலை பற்றி துப்பு துலக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் திக்கு தெரியாமல் தவித்தனர்.
இந்நிலையில், போலீ சாரின் தீவிர விசாரணையில் கூவம் ஆற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பூந்தமல்லி ஏரிக்கரையை சேர்ந்த நீலாவதி (20) என்பது உறுதி செய்யப்பட்டது. அவரை கொலை செய்தது யார், எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து நீலாவதி யின் செல்போனில் பதிவான நம்பர்களை அடிப் படையாக வைத்து விசா ரணை முடுக்கி விடப்பட் டது. நீலாவதியிடம் கடைசியாக பேசிய 10 பேரின் பட்டியல் தயாரிக் கப்பட்டு சம்பந்தப்பட்ட வர்களிடமும் விசாரணை செய்யப்பட்டது.
அப்போது, சூளைமேடு வினோபாஜி தெருவில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்த அருண் (25) என்பவர் சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் வெளியூரில் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். சொந்த ஊரான விருதாச்சலத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை அழைத்து வந்தனர்.
இந்நிலையில், போலீ சாரின் தீவிர விசாரணையில் கூவம் ஆற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பூந்தமல்லி ஏரிக்கரையை சேர்ந்த நீலாவதி (20) என்பது உறுதி செய்யப்பட்டது. அவரை கொலை செய்தது யார், எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து நீலாவதி யின் செல்போனில் பதிவான நம்பர்களை அடிப் படையாக வைத்து விசா ரணை முடுக்கி விடப்பட் டது. நீலாவதியிடம் கடைசியாக பேசிய 10 பேரின் பட்டியல் தயாரிக் கப்பட்டு சம்பந்தப்பட்ட வர்களிடமும் விசாரணை செய்யப்பட்டது.
அப்போது, சூளைமேடு வினோபாஜி தெருவில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்த அருண் (25) என்பவர் சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் வெளியூரில் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். சொந்த ஊரான விருதாச்சலத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை யில் நீலாவதியை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண் டார். பின்னர் அருணை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
நீலாவதியை கொலை செய்தது ஏன் என்பது பற்றி அருண் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சூளைமேடு சுப்பாராவ் நகரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அடிக்கடி செல் வேன். அங்கு வாடகைக்கு குடியிருந்த நீலாவதிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பார்த்த முதல் நாளே நெருக்கம் ஏற்பட்டது. இரண்டு நாட்களில் காதலர்களாக மாறினோம். எனது வேலையை நான் மறந்தேன். தொடர்ந்து இருவரும் விடிய விடிய பேச ஆரம்பித் தோம். 3வது நாளிலேயே உல்லாசமாக இருக்க ஆரம் பித்தோம். அதன்பின்னர் 4 நாட்கள் தொடர்ந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தோம். ஒருவாரம் இது தொடர்ந்தது.
இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளும்படி நீலாவதி என்னை நச்சரிக்க ஆரம்பித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்தேன். ஒரே வாரத்தில் நம்முடன் நெருக்கமாக பழகியவர் வேறு வாலிபருடன் பழக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகித்தேன்.
இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளும்படி நீலாவதி என்னை நச்சரிக்க ஆரம்பித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்தேன். ஒரே வாரத்தில் நம்முடன் நெருக்கமாக பழகியவர் வேறு வாலிபருடன் பழக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகித்தேன்.
எனவே, அவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், நீலாவதி எனது வீட்டிற்கே வர ஆரம்பித் தார். இது எனக்கு ஆத் திரத்தை ஏற்படுத்தியது.
அவர் இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது. எனவே, தீர்த்துக்கட்டி விடவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன். சம்பவத்தன்று கத்தி ஒன்றை கடையில் வாங்கிக் கொண்டேன்.
அவர் இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது. எனவே, தீர்த்துக்கட்டி விடவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன். சம்பவத்தன்று கத்தி ஒன்றை கடையில் வாங்கிக் கொண்டேன்.
திருமணம் பற்றி பேச வேண்டும். சூளைமேடு கூவம் ஆறு அருகில் வரும்படி அவரிடம் போனில் கூறினேன். அவரும் ஆற்றங்கரைக்கு வந்தார். நைசாக அவருடன் பேச்சு கொடுத்தேன். குத்தி கொலை செய்யலாம் என்று நினைத்தேன்.
ஆனால், நீலாவதி சுதாரித்து விடக்கூடாது என்பதற்காக பேசிக் கொண்டு இருந்தபோதே அருகில் கிடந்த கல்லால் அவர் முகத்தில் மின்னல் வேகத்தில் தாக்கினேன். நிலை குலைந்த அவரது தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டு கொன்றேன்.
ஆனால், நீலாவதி சுதாரித்து விடக்கூடாது என்பதற்காக பேசிக் கொண்டு இருந்தபோதே அருகில் கிடந்த கல்லால் அவர் முகத்தில் மின்னல் வேகத்தில் தாக்கினேன். நிலை குலைந்த அவரது தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டு கொன்றேன்.
பின்னர், கூவத்தி லேயே சடலத்தை வீசி விட்டு ஒன்றும் தெரியாத வன் போல் சென்று விட்டேன். இறுதியில் போலீசாரின் வலையில் சிக்கி விட்டேன். இவ்வாறு அருண் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
0 comments