8 June 2013

ஒன்றரை வயது குழந்தைக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை

ஒன்றரை வயது குழந்தைக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை: 

சென்னை ஜி.எச். மருத்துவர்கள் சாதனை 


சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஒன்றரை வயது குழந்தைக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த ஃபரூக், சபீனா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தைக்கு, ஒரு மாதத்திற்கும் மேலாக சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டிருந்தது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுநீரகக் குழாயில் 2 சென்டிமீட்டர் அளவுக்கு கல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி, மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கனகசபை, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 42 குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் அகற்றி சிறப்பான சிகிச்சை அளித்திருப்பதாகத் தெரிவித்தார். 
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top