ராமநாதபுரம் அருகே கணவன் மாயம்: மனைவி புகார்
ராமநாதபுரம், ஜூன் 3:
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பகுதி புதுமடம் கிழக்கு தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன் (வயது41), எலக்ட்ரிக் வேலை செய்து வந்தார். கடந்த 30-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கார்த்திகேயன் வீடு திரும்பவில்லை.
மனைவி கவிதா செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் உச்சிப்புளி போலீசில் கவிதா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தேசிங்கு ஆகியோர் காணாமல்போன கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.
0 comments