சீனா கட்டிவரும் விண்வெளி ஆய்வுக்கூடத்திற்கு
ஆட்களை அனுப்ப திட்டம்
பெய்ஜிங், ஜூன் 3:
பூமி மற்றும் விண்வெளிகளை ஆராய்வதற்காக ரஷ்யா மிர் விண்வெளி நிலையத்தையும் அமெரிக்கா சர்வதேச விண்வெளி நிலையத்தையும் இயக்கி வருகிறது. இதற்கு போட்டியாக சீனா "ஸ்பேஸ் லேப்" என்ற ஒரு விண்வெளி ஆய்வுக்கூடத்தை கட்டி வருகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வரும் இந்த ஸ்பேஸ் லேப் விண்வெளி ஆய்வுக்கூடத்திற்கு இரண்டாவது முறையாக இந்த மாதம் ஆட்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட ஷென்சூ-10 என்ற விண்கலத்தின் மூலம் 3 விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள்.
பின்னர் அவர்கள் விண்வெளி குறித்து மேற்கொள்ளும் சோதனைகளை இங்குள்ள மாணவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடுவார்கள் என்றும் சீனா கூறியுள்ளது.
0 comments