தேவிபட்டிணம் அருகே காரில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகை மாயம்
இராமநாதபுரம், ஜூன். 1:
பேக்கில் வைத்திருந்த 80 பவுன் நகை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் தேவிபட்டிணம் சின்னப்பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் செய்யது முகம்மது. இவரது மகன் முகமது நவாஸ் (வயது 39). இவர் சென்னை சேத்துப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தேவிபட்டிணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு முகமது நவாஸ் வந்திருந்தார்.
பின்னர் சென்னை செல்வதற்காக ராமநாதபுரம் ரெயில்வே நிலையத்திற்கு முகமது நவாஸ் காரில் கிளம்பினார். காரின் மேல் பகுதியில் லக்கேஜூகளை வைத்து கட்டியிருந்தார். ரெயில்வே ஸ்டேசன் சென்று பார்த்தபோது காரின் மேல் இருந்த லக்கேஜூகளை காணவில்லை. பேக்கில் வைத்திருந்த 80 பவுன் நகையும் காணாமல் போனது.
இது குறித்து தேவிபட்டிணம் போலீசில் முகமது நவாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments