கடல் கொந்தளிப்பு மற்றும் இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல்
காரணமாகவும் இராமேசுவரம் மீனவர்கள்
2-வது நாள் வேலைநிறுத்தம்
பாம்பன்-தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கர சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இராமேசுவரம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. இன்று காலையில் பயங்கர காற்று வீசியது.
அப்போது
கடல் அலைகள் 5 அடி உயரத்துக்கு எழுந்தது. கடந்த 3 நாட்களாக பலத்த காற்று வீசி வருவதாலும்,
கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள தாலும்,
இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல் காரணமாகவும் மீனவர்கள்
கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை.
மேலும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேசுவரம் பகுதி மீனவர்கள் 57 பேர்களையும், படகுகளையும் விடுதலை செய்யக்கோரியும் நேற்று முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 2-வது நாளாக மீனவர்களின் வேலைநிறுத்தம் போராட்டம் தொடர்கிறது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மீனவர் சங்க தலைவர் சேசுராஜா கூறியதாவது:-
கடலில் பலத்த காற்று வீசி வருவதால், கடல் கொந்தளிப்பும் உள்ளது. ராமேசுவரம் மீனவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இலங்கை கடற்படையினர் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள 57 மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசின் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments